என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துப்பாக்கி சுடுதல் - 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்
Byமாலை மலர்25 July 2021 1:31 AM GMT (Updated: 25 July 2021 1:53 AM GMT)
பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனா, கிரீஸ், ரஷ்யா வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர்.
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.
இந்தியா சார்பில் யஷாஸ்வினி தேஸ்வால், மானு பாகெர் ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தம் 6 சீரிஸ், ஒரு சீரிஸ்க்கு 10 சுடுதல் என மொத்தம் 60 முறை சுடுதல் வேண்டும். ஒரு முறை இலக்கை துல்லியமாக சுட்டால் 11 புள்ளிகள் வழங்கப்படும்.
யஷாஸ்வினி ஒன்று முதல் ஆறு சீரிஸில் முறையே 94, 98, 94, 97, 96, 95 புள்ளிகள் பெற்றார். இவர் பெற்ற மொத்த புள்ளிகள் 574-11x அவரை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்ல உதவவில்லை. இதனால் யஷாஸ்வினி 13-ம் இடத்தையே பிடித்தார்.
இதேபோல், மானு பாகெர் ஒன்று முதல் ஆறு சீரிசில் 98, 95, 94, 95, 98, 95 புள்ளிகள் பெற்றார். இவர் பெற்ற மொத்த புள்ளிகள் 575-14x 12ம் இடம் பிடித்தார்.
முதல் 8 வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இருவரும் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தனர்.
சீன வீராங்கனை முதலிடமும், கிரீஸ் வீராங்கனை 2-வது இடமும், ரஷ்ய வீராங்கனை 3ம் இடமும் பிடித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X