search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ் சுண்டப்பட்ட காட்சி
    X
    டாஸ் சுண்டப்பட்ட காட்சி

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: 15 ரன்களுக்குள் 2 விக்கெட்டை இழந்த திருச்சி வாரியார்ஸ்

    டிஎன்பில் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி அணி 15 ரன்களுக்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்கள் இன்றி போட்டி நடத்தப்படுகிறது. முதல் இரண்டு ஆட்டங்கள் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டன. பங்கேற்ற அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மூன்றாவது லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. திருச்சி அணி பேட்டிங்கை தொடங்கியது. துவக்க வீரர் அமித் சாத்விக் நிதானமாக விளையாடினார். மறுமுனையில் முகுந்த் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் நிதிஷ் ராஜகோபால் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

    15 ரன்களுக்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகள் சரிந்தன. அதன்பின்னர் அமித் சாத்விக்குடன் கீப்பர் ஆதித்ய கணேஷ் இணைந்தார்.
    Next Story
    ×