search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    டோக்கியோ செல்லும் வீரர்- வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடல்

    பாரிஸில் உங்களுடைய சாதனைக்குப் பிறகு, நாடே உங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது என்று பாரத பிரதமர் மோடி, வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியை புகழ்ந்து பேசினார்.
    ஜப்பான் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக 100-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் ஜப்பான் செல்கின்றனர். வருகிற 17-ந்தேதியில் இருந்து இந்தியாவில் இருந்து புறப்பட்டுச் செல்வார்கள்.

    இந்த நிலையில் இன்று வீரர்- வீராங்கனைகளுடன் பாரத பிரதமர் மோடி உரையாடினார். அப்போது வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியிடம் பிரதமர் மோடி ‘‘பாரிஸில் உங்களுடைய சாதனைக்குப் பிறகு, நாடே உங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. தற்போது உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக உள்ளீர்கள். உங்களுடைய பயணம் சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.

    தீபிகா குமாரி ‘‘தொடக்கத்தில் இருந்து எனது பயணம் சிறப்பாக சிறப்பாக உள்ளது. மூங்கிலில் அம்பு செய்து தொடங்கினேன். அதன்பின் படிப்படியாக நவீன அம்புக்கு மாறினேன்’’ என்றார்.

    அனுராக் தாகூர்

    விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறுகையில் ‘‘இங்குள்ள பயிற்சியாளர் ஸ்டாஃப்கள், சப்போர்ட் ஸ்டாப்ஃகள் உள்ள அதிகாரிகளுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நமது வீரர்களுடன் அவர்கள் கடுமையாக உழைத்தார்கள். வீரர்களுக்கு உதவி செய்வதில் இருந்து ஒருபோதும் அரசு தவறாது. சிறப்பு திட்டம் உள்பட பல உதவிகள் செய்துள்ளோம்’’ என்றார்.
    Next Story
    ×