search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிவி சிந்து
    X
    பிவி சிந்து

    டோக்கியோ ஒலிம்பிக்: பேட்மிட்டனில் கலந்த கொள்ள இருக்கும் இந்திய வீரர்கள் விவரம்

    டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய அணிக்காக சிரங் ஷெட்டி பங்கேற்கிறார்.
    பிவி சிந்து

    பிவி சிந்து 1995 ஆம் ஆண்டு ஜுலை 5 ஆம் தேதி தெலுங்கானாவில் பிறந்தார். 25 வயதான பிவி சிந்து பேட்மிட்டன் வீராங்கணை ஆவார். இவர் சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். பிவி சிந்து 2009 ஆம் ஆண்டு தனது 14 வயதில் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கத்தொடங்கினார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் பிவி சிந்து வெள்ளிப்பதக்கம் வெற்றார். தற்போது இரண்டாவது முறையாக அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கிறார். இவர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடுகிறார்.

    சாய் பிரனீத்

    சாய் பிரனீத் 1992 ஆகஸ்ட் 10-ம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் பிறந்தார். 28 வயதான இவர் டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடுகிறார். 2019 ஆம் ஆண்டு சுவிஸ்சர்லாந்தில் நடைபெற்ற பேட்மிட்டன் வேல்ட் பெடரேஷன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சாய் பிரனீத் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இவர் உலக தரவரிசை பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளார். 

    சாத் விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி

    சாத் விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி 2000 ஆகஸ்ட் 13-ம் தேதி ஆந்திராவில் பிறந்தார். இவர் டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பங்கேற்கிறார். இவர் சிரங் ஷெட்டியுடன் இணைந்து விளையாடுகிறார். இந்த ஜோடி 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

    சிரங் ஷெட்டி

    சிரங் ஷெட்டி 1997 ஆம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பங்கேற்கிறார். இவர் சாத் விக் சாய்ராஜ் ரங்கிரெட்டியுடன் இணைந்து விளையாடுகிறார். இந்த ஜோடி 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. இந்த ஜோடி உலக பேட்மிட்டன் இரட்டையர் பிரிவு தரவரிசை பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.
    Next Story
    ×