என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் - ஜோகோவிச் புதிய வரலாறு படைத்தார்
பாரீஸ்:
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-7(6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு 5-வது வரிசையில் உள்ள சிட்சிபாசை (கிரீஸ்) தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.
பிரெஞ்சு ஓபன் பட்டத்தை அவர் 2-வது முறையாக வென்றார். இதற்கு முன்பு 2016-ல் கைப்பற்றி இருந்தார்.
இதன்மூலம் ஜோகோவிச் புதிய வரலாறு படைத்தார். 52 ஆண்டுகளில் 4 வகையான கிராண்ட் சிலாம் போட்டிகளிலும் குறைந்தது 2 முறை பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இதற்கு முன்பு 1969-ல் ராட் லாவர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.
ஜோகோவிச் ஒட்டு மொத்தமாக 19 கிராண்ட் சிலாம் பட்டம் பெற்று உள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 9 முறையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2 தடவையும், விம்பிள்டனை 5 தடவையும், அமெரிக்க ஓபனையும் 3 முறையும் கைப்பற்றினார்.
பெடரர் (சுவிட்சர்லாந்து), நடால் (ஸ்பெயின்) ஆகியோருக்கு அடுத்தபடியாக ஜோகோவிச் உள்ளார். இருவரும் தலா 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று முதல் இடத்தில் உள்ளனர். இன்னும் ஒரு கிராண்ட் சிலாம் பட்டம் வெல்லும் போது அவர்களுடன் ஜோகோவிச்சும் இணைவார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்