என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிசிசிஐ- இலங்கை கிரிக்கெட் போர்டு பேச்சுவார்த்தை: டி20 உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பு கிடைக்குமா?
Byமாலை மலர்7 Jun 2021 10:17 AM GMT (Updated: 7 Jun 2021 10:17 AM GMT)
டி20 உலகக்கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டியை இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்திடம் பிசிசிஐ போட்டியை நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையில் உலகக்கோப்பைக்கு முன் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை ஆகியவற்றிற்கு இடையில் நான்கு நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது.
உலகக்கோப்பைக்காக ஐசிசி-யிடம் மைதானத்தை 15 நாட்களுக்கு முன் ஒப்படைக்க வேண்டும். இதனால் ஐபிஎல் போட்டியை நடத்துவதிலும் சிக்கல் ஏற்படும். மேலும் ஷார்ஜா, அபு தாபி, துபாய் ஆகிய மூன்று மைதானங்களே உள்ளன. ஆடுகளங்கள் விளையாட விளையாட தொய்வுடைந்துவிடும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு போட்டியை இலங்கையில் நடத்ததலாமா? என்ற சிந்தனையும் பிசிசிஐ நினைப்பில் ஓடியது. இதுகுறித்து பிசிசிஐ- இலங்கை கிரிக்கெட் போர்டு ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது.
இலங்கையில் உலகக்கோப்பை தொடரை நடத்தினால், மைதானத்தை ஒப்படைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது என பிசிசிஐ நினைத்திருக்கலாம்.
இதனைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. கொழும்பில் மட்டும் மூன்று சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X