search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவி, குழந்தையுடன் ரோகித் சர்மா (கோப்புப்படம்)
    X
    மனைவி, குழந்தையுடன் ரோகித் சர்மா (கோப்புப்படம்)

    ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்: இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து செல்ல அனுமதி

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷி மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறுகிறது. அதன்பிறகு இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கி, செப்டம்பர் 14 அன்று முடிவடைகிறது.

    இங்கிலாந்தில் நான்கு மாதங்கள் தங்க வேண்டியிருப்பதால் குடும்பத்தினரும் இங்கிலாந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என வீரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வீரர்களின் கோரிக்கையை இங்கிலாந்து அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் தற்போது இங்கிலாந்து செல்லவுள்ளார்கள். 


    இந்திய ஆடவர், மகளிர் அணியினர் ஒன்றாகச் சேர்ந்து தனி விமானத்தில் இங்கிலாந்துக்குச் செல்கிறார்கள். எனினும் மகளிர் அணியினர் குறுகிய காலம் மட்டுமே இங்கிலாந்தில் இருப்பதால் அவர்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்லப் போவதில்லை என்று அறியப்படுகிறது.
    Next Story
    ×