search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அமெரிக்காவில் பயண கட்டுப்பாடு: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை பாதிக்காது - அமைப்பு குழு தகவல்

    ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வரும் அனைவருக்குமே ஜப்பானுக்குள் நுழையும் போது அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருக்கும் என அமைப்பு குழு தெரிவித்துள்ளது.

    டோக்கியோ:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.

    கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடந்தது.

    2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    தற்போது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை டோக்கியோவில் நடக் கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடை பெறுகிறது.

    இதற்கிடையே அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கு செல்ல பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஜப்பான், இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க வெளியுறவு துறை 4-ம் நிலை பயண கட்டுப்பாட்டு ஆலோசனையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஒலிம்பிக் நடைபெற இன்னும் 2 மாதத்துக்கு குறைவாக உள்ள நிலையில் இந்த கட்டுப்பாட்டால் ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வியை மேலும் வலுப்படுத்தி வருகிறது.

    ஏற்கனவே ஜப்பானில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் பலரும் ஒலிம்பிக் போட்டியை விரும்பவில்லை.

    இந்தநிலையில் அமெரிக்காவின் பயண கட்டுப்பாட்டால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று போட்டி அமைப்பு குழு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தலைமை அதிகாரி சிய்கோ கூறியதாவது:-

    அமெரிக்காவின் பயண கட்டுப்பாடு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை எந்த விதத்திலும் பாதிக்காது. போட்டியை நடத்த தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் நிபுணர்கள் குழு தொடர்ந்து மேற்கொள்ளும்.

    ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வரும் அனைவருக்குமே ஜப்பானுக்குள் நுழையும் போது அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜப்பானில் கடந்த வாரத்தில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் குழு ஒலிம்பிக் போட்டி நடத்தும் முயற்சியை இப்போதே கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×