என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் ஒருநாள் போட்டி - இலங்கையை 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வங்காளதேசம்
Byமாலை மலர்23 May 2021 8:51 PM GMT (Updated: 23 May 2021 8:51 PM GMT)
இலங்கை அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
டாக்கா:
வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்காளதேசம் அணி 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 84 ரன்னும், மஹமதுல்லா 54 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 52 ரன்னும் எடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் தனஞ்செயா டி சில்வா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. வங்காளதேச பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணியில் வஹிந்து ஹசரன்கா மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 60 பந்துகளில் 5 சிக்சர், 3 பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
இதனால் வங்காளதேசம் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், முஷ்டாபிசுர் 3 விக்கெட்டும், மொகமது சைபுதின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வங்காளதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்காளதேசம் அணி 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 84 ரன்னும், மஹமதுல்லா 54 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 52 ரன்னும் எடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் தனஞ்செயா டி சில்வா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இலங்கை அணியில் வஹிந்து ஹசரன்கா மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 60 பந்துகளில் 5 சிக்சர், 3 பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
இதனால் வங்காளதேசம் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், முஷ்டாபிசுர் 3 விக்கெட்டும், மொகமது சைபுதின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வங்காளதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X