search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
    X
    சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

    ஐபிஎல்: இரண்டு புதிய அணி இணைக்கப்பட்டால் 5 வெளிநாட்டு வீரர்களை அனுமதிக்க வேண்டும்- சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

    ஐபிஎல் கிரிக்கெட்டில் அடுத்த சீசனில் இருந்து இரண்டு அணிகள் கூடுதலாக விளையாடும்போது, ஆடும் லெவனில் ஐந்து வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் தற்போது 8 அணிகள் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியின் ஆடும் லெவனில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதனால் சில அணிகளில் முக்கியமான வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்படுகிறது. சரியான கலவை அணியும் மிஸ் ஆகிறது. இதனால் ஐந்து வெளிநாட்டு வீரர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து கொண்டே வருகிறது.

    இந்த நிலையில் அடுத்த சீசனில் இருந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் 10 அணிகள் விளையாட வாய்ப்புள்ளது. அப்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஐந்து வீரர்களை ஆடும் லெவன் அணியில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

    தற்போதைய நிலையில் ஒரு அணிக்கு 7 இந்திய வீரர்கள் என மொத்தம் 56 வீரர்கள் ஆடும் லெவன் அணியில் இடம் பெற முடியும். 10 அணிகள் வந்தால், 70 வீரர்கள் பங்கேற்க முடியும். ஐந்து வெளிநாட்டு வீரர்களை அனுமதித்தாலும் 60 வீரர்கள் விளையாடும் எனத் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×