என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களை அனுமதித்தது பொறுப்பற்ற தன்மை: மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் பயிற்சியாளர்
Byமாலை மலர்13 May 2021 11:23 AM GMT (Updated: 13 May 2021 11:23 AM GMT)
அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி அளித்தது பொறுப்பற்ற தன்மை என்று மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதன்காரணமாக மார்ச் மாதம் இந்தியாவில் நாழு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல், மே, ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது.
அதன்பின் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இந்த வருடம் தொடக்கத்தில், அதாவது ஜனவரி மாதம் முழுமையாக கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனாவை வென்று விட்டோம் என்று அரசியல்வாதிகளும், பொதுமக்களும் நினைத்தனர்.
இதனால் அரசியல் கூட்டங்கள், திருமணங்கள், மதம் தொடர்பான கூட்டங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் கவலையின்றி அளவிற்கு அதிகமாக கூடினர். இந்தியா- இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியின்போது அகமதாபாத் மைதானத்தில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் பிப்ரவரி கடைசி வாரத்தில் இருந்து மார்ச் முதல் வாரம் வரை நடைபெற்றது.
அப்போது இந்தியாவில் 2-வது கட்ட கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமான அதிரிக்க தொடங்கியது.
ஐபிஎல் போட்டியில் விளையாடி வந்த வீரர்கள் அகமதாபாத் மற்றும் டெல்லியில் விளையாடியபோது கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். அகமதாபாத்தில் அதிகமான கொரோனா பாதிப்பு உள்ளது.
கொரோனா அதிகரிக்கும் நேரத்தில் இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களை அனுமதித்தது பொறுப்பற்றத்தன்மை என்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருக்கும் நியூசிலாந்தின் பம்மென்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருக்கும் நியூசிலாந்தின் பம்மென்ட் கூறுகையில் ‘‘நான் முன்னதாகவே (ஜனவரி மாதம்) பயோ-பபுள் பாதுகாப்பு வளையத்திற்கு இருக்கவில்லை. பொதுமக்களிடம் தொடர்பு கொள்ளும் சிறிய வாய்ப்புகள் இருந்தன. சில அரசியல் பேரணிகள், அது திருமணம் முடிப்பதற்கான காலம், மதம் தொடர்பான பண்டிகைகள் போன்றவற்றால், மக்கள் அதிக அளவில் கூடினர். மக்களிடையே அதிகமான தொடர்புகள் இருந்தன.
இங்கிலாந்து தொடரின்போது சில போட்டிகளில் பூட்டிய மைதானத்திற்குள் நடைபெற்றன. அதன்பின் அகமதாபாத் மைதானத்தில் 70 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி அளித்தனர். என்னுடைய கண்ணோட்டத்தில் அது கொஞ்சம் பொறுப்பற்ற தன்மைதான். தற்போது அதிக கொரோனா பாதித்த இடமாக அகமதாபாத் மாறியுள்ளது’’ என்றார்.
மே 4-ந்தேதி ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவித்த பின் கடந்த சனிக்கிழமை பம்மென்ட் நியூசிலாந்து சென்றடைந்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X