என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் மரணம்
Byமாலை மலர்11 May 2021 2:06 AM GMT (Updated: 11 May 2021 2:06 AM GMT)
இந்திய அணிக்காக 26 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் பிரான்கோ 1960-ம் ஆண்டில் ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார்
புதுடெல்லி:
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் நடுகள வீரரான பார்ச்சுனட்டோ பிரான்கோ கோவாவில் நேற்று மரணம் அடைந்தார். 84 வயதான அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்திய அணிக்காக 26 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் பிரான்கோ 1960-ம் ஆண்டில் ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார். அத்துடன் 1962-ம் ஆண்டு ஜகர்தாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியிலும் அங்கம் வகித்தார். 1962-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியில் 2-வது இடம் பிடித்த இந்திய அணியிலும் இடம் பெற்று இருந்தார். மும்பையை சேர்ந்த டாடா கால்பந்து கிளப் அணிக்காக நீண்ட நாட்கள் விளையாடிய அவர் மராட்டிய மாநில அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். பிரான்கோ மறைவுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் நடுகள வீரரான பார்ச்சுனட்டோ பிரான்கோ கோவாவில் நேற்று மரணம் அடைந்தார். 84 வயதான அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்திய அணிக்காக 26 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் பிரான்கோ 1960-ம் ஆண்டில் ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார். அத்துடன் 1962-ம் ஆண்டு ஜகர்தாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியிலும் அங்கம் வகித்தார். 1962-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியில் 2-வது இடம் பிடித்த இந்திய அணியிலும் இடம் பெற்று இருந்தார். மும்பையை சேர்ந்த டாடா கால்பந்து கிளப் அணிக்காக நீண்ட நாட்கள் விளையாடிய அவர் மராட்டிய மாநில அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். பிரான்கோ மறைவுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X