என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
Byமாலை மலர்9 May 2021 12:58 AM GMT (Updated: 9 May 2021 12:58 AM GMT)
பெண்களுக்கான 50 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா 2-1 என்ற புள்ளி கணக்கில் அன்னா லுகாசிக்கை (போலந்து) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
சோபியா:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான கடைசி தகுதி சுற்றான உலக மல்யுத்த போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 50 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா 2-1 என்ற புள்ளி கணக்கில் அன்னா லுகாசிக்கை (போலந்து) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் சீமா பிஸ்லா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் பங்கேற்க தகுதி பெற்ற 8-வது நபர் சீமா பிஸ்லா ஆவார். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியா சார்பில் மொத்தம் 8 பேர் தகுதி பெற்றதே அதிகபட்சமாகும். அது இந்த முறை சமன் செய்யப்பட்டுள்ளது.
இறுதி ஆட்டத்தில் சீமா பிஸ்லாவை எதிர்த்து ஆட இருந்த லூசியா யாமிலெத் (ஈகுவடார்)காயம் காரணமாக விலகினார். இதனால் களம் இறங்காமலேயே சீமா தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான கடைசி தகுதி சுற்றான உலக மல்யுத்த போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 50 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா 2-1 என்ற புள்ளி கணக்கில் அன்னா லுகாசிக்கை (போலந்து) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் சீமா பிஸ்லா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் பங்கேற்க தகுதி பெற்ற 8-வது நபர் சீமா பிஸ்லா ஆவார். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியா சார்பில் மொத்தம் 8 பேர் தகுதி பெற்றதே அதிகபட்சமாகும். அது இந்த முறை சமன் செய்யப்பட்டுள்ளது.
இறுதி ஆட்டத்தில் சீமா பிஸ்லாவை எதிர்த்து ஆட இருந்த லூசியா யாமிலெத் (ஈகுவடார்)காயம் காரணமாக விலகினார். இதனால் களம் இறங்காமலேயே சீமா தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X