என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கென தனிவிமானம் ஏற்பாடு திட்டம் இல்லை: நிக் ஹாக்லி
Byமாலை மலர்3 May 2021 11:58 AM GMT (Updated: 3 May 2021 11:58 AM GMT)
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி இல்லை என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் கடந்த மாதம் 9-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே கொரோனா வேகமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது.
தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. இதனால் பெரும்பாலான நாடுகள் இந்திய விமான சேவைக்கு தடைக்கு விதித்துள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியாவில் இருந்து செல்வதற்கு தடைவிதித்துள்ளது மே 15-ந்தேதி வரை இந்தத் தடை நீடிக்கிறது.
தடையை மீறினால் சிறைத்தண்டனைக்கு உள்ளாவீர்கள் என எச்சரித்துள்ளது. இதற்கிடையே ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் சில ஆஸ்திரேலியா வீரர்கள், ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு தங்களை சிறப்பு வாடகை விமானம் மூலம் சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், தற்போதைக்கு சிறப்பு வாடகை விமானம் மூலம் ஐபிஎல் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த நாடு அழைக்கும் திட்டமில்லை என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு சிஇஓ நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X