என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேட்ஸ்மேன்கள் ஆதிக்கத்தால் இலங்கை, வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் டிரா
Byமாலை மலர்25 April 2021 7:46 PM GMT
பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தியதால் இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
பல்லேகெலே:
இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 541 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
தமிம் இக்பால் 90 ரன்னில் வெளியேறினார். லிட்டன் தாஸ் அரை சதமடித்து அவுட்டானார். முஷ்பிகுர் ரஹீம் அரை சதமடித்து 68 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இலங்கை சார்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணரத்னே இரட்டை சதமடித்து 244 ரன்னில் அவுட்டானார். தனஞ்செய டி சில்வா 166 ரன்னில் வெளியேறினார்.
இருவரும் இணைந்து 4வ்து விக்கெட்டுக்கு 345 ரன்கள் சேர்த்தனர். லஹிரு திரிமனே 58 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 648 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம், ஐந்தாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்தது. தமிம் இக்பால் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதன்மூலம் இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
ஆட்ட நாயகன் விருது திமுத் கருணரத்னேவுக்கு வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 29-ம் தேதி தொடங்குகிறது.
இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 541 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 163 ரன்னிலும், மொமினுல் ஹக் 127 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு நஜ்முல் ஹூசைன்-மொமினுல் ஹக் ஜோடி 242 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
தமிம் இக்பால் 90 ரன்னில் வெளியேறினார். லிட்டன் தாஸ் அரை சதமடித்து அவுட்டானார். முஷ்பிகுர் ரஹீம் அரை சதமடித்து 68 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இலங்கை சார்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணரத்னே இரட்டை சதமடித்து 244 ரன்னில் அவுட்டானார். தனஞ்செய டி சில்வா 166 ரன்னில் வெளியேறினார்.
இருவரும் இணைந்து 4வ்து விக்கெட்டுக்கு 345 ரன்கள் சேர்த்தனர். லஹிரு திரிமனே 58 ரன்னில் அவுட்டானார்.
வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம், ஐந்தாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்தது. தமிம் இக்பால் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதன்மூலம் இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
ஆட்ட நாயகன் விருது திமுத் கருணரத்னேவுக்கு வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 29-ம் தேதி தொடங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X