என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3-வது டி20 போட்டியிலும் வங்காளதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து
Byமாலை மலர்1 April 2021 10:39 AM GMT (Updated: 1 April 2021 10:39 AM GMT)
பின் ஆலன் 29 பந்தில் 71 ரன்கள் விளாச, 3-வது ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.
நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. மழைக்காரணமாக ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்தில் 19 பந்தில் 44 ரன்களும், பின் ஆலகன் 29 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 71 ரன்களும் விளாசினர்.
பின்னர் 10 ஓவரில் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது. நியூசிலாந்து அணியின் துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வங்காளதேசம் 9.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டிம் சவுத்தி 3 விக்கெட்டும், டாட் ஆஸ்லே 4 விக்கெட்டும் வீழ்த்தினர். 29 பந்தில் 71 ரன்கள் விளாசிய பின் ஆலன் ஆட்டநாயகன் விருதையும், கிளென் பிலிப்ஸ் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X