என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்து வீசும் தென்ஆப்பிரிக்கா வீராங்கனை
    X
    பந்து வீசும் தென்ஆப்பிரிக்கா வீராங்கனை

    பெண்கள் கிரிக்கெட்: 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

    தொடக்க வீராங்கனை மந்தனா ஆட்டமிழக்காமல் 80 ரன்களும், ராவத் ஆட்டமிழக்காமல் 62 ரன்களும், ஜுலான் கோஸ்வாமி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

    இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டியில் செய்த தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகள் 157 ரன்னில் சுருண்டனர். இந்திய வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஜூலான் கோஸ்வாமி 10 ஓவரில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மான்சி ஜோஷி 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ராஜேஸ்வர் கெய்க்வாரட் 37 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினர். தொடக்க வீராங்கனை மந்தனா- அடுத்து வந்த ராவத் உடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவிக்க இந்திய அணி 28.4 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    மந்தனா ஆட்டமிழக்காமல் 64 பந்தில் 80 ரன்களும், ராவத் 89 பந்தில் 62 ரன்கள் எடுத்தனர். மந்தனா 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசினார்.
    Next Story
    ×