என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணத்திற்கு தயாராகும் பும்ரா: இதனால்தான் கடைசி டெஸ்டில் விளையாடவில்லையாம்....
Byமாலை மலர்2 March 2021 5:22 PM GMT (Updated: 2 March 2021 5:22 PM GMT)
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து பும்ரா விலகியுள்ள நிலையில், திருமணத்திற்கு தயாராக இருப்பதால் விடுமுறை கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணியின் முன்னணி் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 4-வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தயாராகி வந்த நிலையில், பும்ரா தனிப்பட்ட காரணத்திற்காக தன்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டதால் கடைசி போட்டிக்கான இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்படவில்லை.
தற்போது அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதற்கு தயாராக வேண்டியிருப்பதால் விடுப்பு கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரிகள் தரப்பில் கேட்டதற்கு, தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
பும்ரா பிசிசிஐ-யிடம் திருமணம் நடைபெற இருப்பதாக கூறி விடுமுறை கேட்டார். அது மிகப்பெரிய நாளிற்கு தயாராக உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X