என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெங்கால் அணிக்காக நீண்ட காலம் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா ஓய்வு
Byமாலை மலர்3 Feb 2021 9:53 AM GMT (Updated: 3 Feb 2021 9:53 AM GMT)
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான அசோக் திண்டா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
மேற்கு வங்காளத்தின் வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா. இவர் கடந்த 2005-ம் ஆண்டு கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 2020 வரை பெங்கால் அணிக்காக விளையாடினார். இந்த வருடம் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டிராபி டி20-யில் கோவா அணிக்காக விளையாடினார்.
இதுவரை 116 முதல்தர போட்டிகளில் விளையாடி 420 விக்கெட்டும், 98 லிஸ்ட்-ஏ போட்டிகளில் 151 விக்கெட்டுகளும், 147 டி20 போட்டிகளில் 151 விக்கெட்டும் வீழ்த்திய அசோக் திண்டா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவர் இந்திய அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளிலும், 9 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், புனே வாரியர்ஸ், ரைசிங் புனு சூப்பர்ஜெயன்ட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்காக 78 போட்டிகளில் விளையாடி 68 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X