என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிப்ரவரி 18-ந்தேதி ஐபிஎல் வீரர்கள் ஏலம்: பிசிசிஐ அதிகாரி தகவல்
Byமாலை மலர்22 Jan 2021 12:17 PM GMT (Updated: 22 Jan 2021 12:17 PM GMT)
2021 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ந்தேதி நடைபெற இருப்பதாக பிசிசிஐ அதிகாரி தெரிவித்ததாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2021 சீசனை நடத்த பிசிசிஐ ஏற்பாடு செய்து வருகிறது. முதற்கட்டமாக 8 அணிகளும் தக்கவைத்த வீரர்கள் பெயரையும், விடுவித்த வீரர்கள் பெயரையும் ஜனவரி 20-ந்தேதிக்குள் (நேற்றுமுன்தினம்) வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கூறியிருந்தது. அதன்படி 8 அணிகளும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.
இந்த நிலையில் பிப்ரவரி 18-ந்தேதி வீரர்கள் ஏலம் நடைபெறும். ஆனால் எங்கு வைத்து நடைபெறும் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ நிறுவனத்திற்கு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆனால் 2021 சீசன் இந்தியாவில் நடைபெறுமா? மீண்டும் வெளிநாட்டில் நடைபெறுமா? என்பத குறித்து பிசிசிஐ இதுவரை உறுதியான முடிவு எடுக்கவில்லை.
இந்தியா - இங்கிலாந்து இடையில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடர் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நடைபெற்று முடிந்தால், ஐபிஎல் தொடர் இந்தியாவில்தான் நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X