search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து டெஸ்ட் அணி வீரர்கள் (கோப்புப்படம்)
    X
    இங்கிலாந்து டெஸ்ட் அணி வீரர்கள் (கோப்புப்படம்)

    இலங்கை தொடர்: கொரோனா பரிசோதனையில் இங்கிலாந்து வீரர்கள் அனைவருக்கும் நெகட்டிவ்

    இலங்கை புறப்படுவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நெகட்டிவ் முடிவு வந்துள்ளது.
    கொரோனா ரைவஸ் தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற இருந்த இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தொடர் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் நாளை இலங்கை புறப்படுகின்றனர். புறப்படுவதற்கு முன் கொரோனா பரிசோதனையில் அனைவரும் தகுதி பெற வேண்டும்.

    இன்று அவர்களுக்கான கொரோனா பரிசோதனை கிடைத்தது. அனைவருக்கும் நெகட்டிவ் முடிவு வர இலங்கை புறப்பட அனுமதி பெற்றனர். இலங்கையில் குறிப்பிட்ட நாட்கள் கோரன்டைனில் இருந்த பின் விளையாட தொடங்குவார்கள்.
    Next Story
    ×