என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனிப்பட்ட அவசர நிலை: லங்கா பிரிமீயர் லீக்கில் இருந்து வெளியேறினார் ஷாகித் அப்ரிடி
Byமாலை மலர்3 Dec 2020 10:27 AM GMT (Updated: 3 Dec 2020 10:27 AM GMT)
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தனிப்பட்ட அவசரநிலை காரணமாக லங்கா பிரிமீயர் லீக்கில் இருந்து விலகியுள்ளார்.
லங்கா பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்றது வருகிறது. இந்தத் தொடர் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கியது. வருகிற 16-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. முதன்முறையாக நடக்கும் இந்த லீக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி இடம் பிடித்திருந்தார். ஐந்து அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
விமானத்தை தவற விட்டதால் தொடக்க போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் விமானம் பிடித்து இலங்கை சென்றார்.
இந்த நிலையில் தற்போது தனிப்பட்ட அவசரநிலை காரணமாக சொந்த நாடு திரும்பியுள்ளார். இவர் காலே கிலாடியேட்டர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். இதுவரை மூன்று போட்டிகளில் காலே அணி விளையாடியுள்ளது. மூன்றிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X