என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லங்கா பிரிமீயர் லீக்கில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்
Byமாலை மலர்18 Nov 2020 10:33 AM GMT (Updated: 18 Nov 2020 10:33 AM GMT)
2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருந்த முனாப் பட்டேல் லங்கா பிரிமீயர் லீக்கில் விளையாடுகிறார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் லங்கா பிரிமீயர் லீக் என்ற பெயரில் டி20 லீக்கை அறிமுகம்படுத்தியது. இந்தத் தொடர் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதில் ஐந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐந்து அணிகளில் கண்டி டஸ்கர் அணியும் ஒன்று. அந்த அணி இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முனாப் பட்டேலை ஒப்பந்தம் செய்துள்ளது. முனாப் பட்டேல் இந்திய அணிக்காக 13 டெஸ்ட், 70 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஏற்கனவே இர்பான் பதானை கண்டி டஸ்கர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது 2-வது வீரராக முனாப் பட்டேலை ஒப்பந்தம் செய்துள்ளது.
அதேவேளையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது தொடரில் இருந்து விலகியுள்ளார். சர்பராஸ் அகமது காலே கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். நியூசிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சர்பராஸ் அகமது இடம் பிடித்துள்ளார். அதனால் லங்கா பிரிமீயர் லீக்கில் இருந்து விலகியுள்ளார்.
சொந்த வேலைக்காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து மலிங்காக விலகினார். இந்தத் தொடரிலும் விளையாட வாய்ப்பில்லை எனக் தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X