என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கான தமிழக வீரர்களின் பயிற்சி அடுத்தவாரம் தொடக்கம்
Byமாலை மலர்12 Nov 2020 10:46 AM GMT (Updated: 12 Nov 2020 10:46 AM GMT)
கொரோனா வைரஸ் காரணமாக தமிழக முதல்தர கிரிக்கெட் வீரர்கள் கடந்த 7 மாதங்களாக எந்தவித பயிற்சிலும் பங்கேற்காமல் உள்ளனர்.
தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்புடன் பயிற்சியை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. ஆனாலும் பாதுகாப்புக்கு பயந்து பயிற்சியில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி முகாமை அடுத்த வாரம் தொடங்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. தீபாவளிக்கு பிறகு பயிற்சி தொடங்கப்படும் என்று வீரர்கள் மற்றும் ஊழியர்களிடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற திங்கட்கிழமை வீரர்கள் மற்றும் ஊழியர் களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த பயிற்சி முகாமில் 41 வீரர்கள் பங்கேற்கிறார்கள். அனைத்து பரிசோதனை முடிவு வந்தபிறகே பயிற்சி தொடங்கப்படும்.
பயிற்சி நடைபெறும் நேரம் இன்னும் முடிவு செய்ய்படவில்லை. பயிற்சி முகாம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X