search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொல்லார்ட்
    X
    பொல்லார்ட்

    உலகக்கோப்பை பைனலுக்குப்பின் மிகப்பெரியது ஐபிஎல் பைனல்: பொல்லார்ட்

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்குப்பின் மிகப்பெரியது ஐபிஎல் இறுதி ஆட்டம் என பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.
    சர்வதேச அளவில் நடைபெறும் டி20 லீக்கில் மிகப்பிரபலம் வாய்ந்தது ஐபிஎல். மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது.

    இந்த ஆண்டு ஐபிஎல் தொடரோடு 13 சீசனில் 6 முறை மும்பை இந்தியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் ஐந்தாவது முறை கோப்பையை வெல்லும்.

    அந்த அணியில் இடம் பிடித்துள்ள அதிரடி பேட்ஸ்மேன் பொல்லார்ட், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்குப்பின் ஐபிஎல் இறுதிப் போட்டிதான் மிகப்பெரியது என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பொல்லார்ட் கூறுகையில் ‘‘இறுதிப் போட்டியை காண ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. என்றாலும், அந்த அளவிற்கான மகிழ்ச்சி இருக்கும். ஐபிஎல் இறுதிப் போட்டி, உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குப்பின் மிகப்பெரியது’’ என்றார்.

    அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே ‘‘இது எங்களுக்கு மற்றொரு ஆட்டம் மாதிரி. நாங்கள் மிகப்பெரிய அளவில் நினைக்கவில்லை. எங்களுடய திறமையை சரியான விதத்தில் செயல்படுத்துவோம். பேட்டிற்கும் பந்திற்கும், ரன்னுக்கும் விக்கெட்டுக்கும் இடையிலான போட்டி. மகிழ்ச்சியாக இந்த போட்டியில் கலந்து கொள்வோம்’’ என்றார்.
    Next Story
    ×