என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ரத்து
Byமாலை மலர்22 Oct 2020 8:48 PM GMT (Updated: 22 Oct 2020 8:48 PM GMT)
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ரத்து செய்யப்படுவதாக உலக பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கோலாலம்பூர்:
இந்த ஆண்டுக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியை நியூசிலாந்தில் இந்த மாதத்தில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இந்த போட்டி அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நியூசிலாந்தில் பல்வேறு இடங்களில் நுழைய நிலவும் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா பரவும் சூழல் காரணமாக போட்டியை நடத்துவதற்கு சாத்தியம் இல்லாததால் உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ரத்து செய்யப்படுவதாக உலக பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று அறிவித்தது.
அடுத்த ஆண்டுக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டியை நடத்த சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதுடன், 2023-ம் ஆண்டு வரை உலக ஜூனியர் போட்டியை நடத்தும் உரிமம் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. எனவே இந்த ஆண்டுக்கான போட்டியை மேலும் தள்ளிப்போட முடியாது என்றும், உலக ஜூனியர் போட்டியை நடத்த நியூசிலாந்து தொடர்ந்து ஆர்வம் காட்டியதால் 2024-ம் ஆண்டுக்கான போட்டியை நடத்தும் உரிமையை அந்த நாட்டுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியை நியூசிலாந்தில் இந்த மாதத்தில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இந்த போட்டி அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நியூசிலாந்தில் பல்வேறு இடங்களில் நுழைய நிலவும் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா பரவும் சூழல் காரணமாக போட்டியை நடத்துவதற்கு சாத்தியம் இல்லாததால் உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ரத்து செய்யப்படுவதாக உலக பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று அறிவித்தது.
அடுத்த ஆண்டுக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டியை நடத்த சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதுடன், 2023-ம் ஆண்டு வரை உலக ஜூனியர் போட்டியை நடத்தும் உரிமம் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. எனவே இந்த ஆண்டுக்கான போட்டியை மேலும் தள்ளிப்போட முடியாது என்றும், உலக ஜூனியர் போட்டியை நடத்த நியூசிலாந்து தொடர்ந்து ஆர்வம் காட்டியதால் 2024-ம் ஆண்டுக்கான போட்டியை நடத்தும் உரிமையை அந்த நாட்டுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X