என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெர்சன் 2.0: டாப் 3 அணிகளுக்கு தண்ணி காட்டிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்
Byமாலை மலர்21 Oct 2020 10:12 AM GMT (Updated: 21 Oct 2020 10:12 AM GMT)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2-வது பாதி தொடரில் பாயின்ட் டேபிளில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் அணிகளை வென்று அசத்தியுள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப். ஆனால் அந்த அணிக்கு முதல் பாதி தொடர் சிறப்பாக அமையவில்லை. 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
இதனால் பஞ்சாப் அணி அவ்வளவுதான் என கருதப்பட்டது. இந்நிலையில்தான் 2-வது பாதி தொடரில் கிறிஸ் கெய்ல் உடன் களம் இறங்கியது. அதன்பின் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
8-வது போட்டியில் ஆர்சிபி-யையும், 9-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை இரண்டு முறை சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்ட நிலையிலும், நேற்று டெல்லி அணியையும் வீழ்த்தியுள்ளது. இந்த மூன்று அணிகளும் பாயின்ட் டேபிளில் டாப் 3 வரிசையில் உள்ளது.
ஒரு வெற்றியுடன் கடைசி இடத்தில் இருந்த பஞ்சாப் தற்போது 10 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளளது. இன்னும் 4 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த நான்கிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறிவிடும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X