search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    மும்பை அணி சூப்பராக விளையாடிய போதிலும், திருப்தியடையாத ரோகித் சர்மா

    நாங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா, இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
    மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சந்தித்தது. இதில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் ஐந்து வெற்றிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் அசத்தி வருகின்றனர். இருந்தாலும் இன்னும் சில பகுதியில் முன்னேற்றம் தேவை என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘தற்போது நாங்கள் விளையாடி வரும் கிரிக்கெட் அதிகமான உறுதியை கொடுத்துள்ளது. எங்களுடைய உத்வேகம் முக்கியமானது. முக்கியமான இரண்டு புள்ளிகள் கிடைத்தது எங்களுக்கு சரியான நாள். நாங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்துள்ளோம். இருந்தாலும் முன்னேற்றம் அடைய சில விசயங்கள் உள்ளன’’ என்றார்.
    Next Story
    ×