என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் 11-வது அணியாக ஈஸ்ட் பெங்கால் சேர்ப்பு
Byமாலை மலர்27 Sep 2020 9:31 PM GMT (Updated: 27 Sep 2020 9:31 PM GMT)
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் 11-வது அணியாக ஈஸ்ட் பெங்கால் அணி இணைய இருப்பதாக நிதா அம்பானி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மும்பை:
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை கோவாவில் நடக்கிறது. அங்குள்ள மூன்று மைதானங்களில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில், வழக்கமாக சென்னையின் எப்.சி, கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி.கோவா, மும்பை சிட்டி, பெங்களூரு எப்.சி. உள்பட 10 அணிகள் பங்கேற்கும். இந்த ஆண்டு ஐ.எஸ்.எல். போட்டியில் கூடுதலாக ஒரு அணி சேர்க்கப்பட்டு உள்ளது. 11-வது அணியாக ஈஸ்ட் பெங்கால் அணி இணைய இருப்பதாக கால்பந்து விளையாட்டு வளர்ச்சி கழக தலைவர் நிதா அம்பானி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஈஸ்ட் பெங்கால் கிளப்பின் பெரும்பான்மையான பங்குகளை ஸ்ரீ சிமென்ட் பவுண்டேசன் வாங்கியுள்ளது.
அதிகமான கால்பந்து ரசிகர்களை கொண்ட மேற்கு வங்காளத்தில் இருந்து ஐ.எஸ்.எல்.-ல் அடியெடுத்து வைக்கும் 2-வது அணி ஈஸ்ட் பெங்கால் ஆகும். ஏற்கனவே பங்கேற்று வரும் அட்லெட்டிகோ டி கொல்கத்தா அணியுடன் பழமைவாய்ந்த மோகன் பகான் கிளப் இணைந்து இந்த முறை ஒருங்கிணைந்த அணியாக களம் காண இருப்பது குறிப்பிடத்தக்கது.
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை கோவாவில் நடக்கிறது. அங்குள்ள மூன்று மைதானங்களில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில், வழக்கமாக சென்னையின் எப்.சி, கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி.கோவா, மும்பை சிட்டி, பெங்களூரு எப்.சி. உள்பட 10 அணிகள் பங்கேற்கும். இந்த ஆண்டு ஐ.எஸ்.எல். போட்டியில் கூடுதலாக ஒரு அணி சேர்க்கப்பட்டு உள்ளது. 11-வது அணியாக ஈஸ்ட் பெங்கால் அணி இணைய இருப்பதாக கால்பந்து விளையாட்டு வளர்ச்சி கழக தலைவர் நிதா அம்பானி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஈஸ்ட் பெங்கால் கிளப்பின் பெரும்பான்மையான பங்குகளை ஸ்ரீ சிமென்ட் பவுண்டேசன் வாங்கியுள்ளது.
அதிகமான கால்பந்து ரசிகர்களை கொண்ட மேற்கு வங்காளத்தில் இருந்து ஐ.எஸ்.எல்.-ல் அடியெடுத்து வைக்கும் 2-வது அணி ஈஸ்ட் பெங்கால் ஆகும். ஏற்கனவே பங்கேற்று வரும் அட்லெட்டிகோ டி கொல்கத்தா அணியுடன் பழமைவாய்ந்த மோகன் பகான் கிளப் இணைந்து இந்த முறை ஒருங்கிணைந்த அணியாக களம் காண இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X