என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்
Byமாலை மலர்9 Sep 2020 9:54 PM GMT (Updated: 9 Sep 2020 9:54 PM GMT)
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒன்றைய பிரிவில் செரீனா வில்லியம்ஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின்
காலிறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் 23 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றவரும், 3-ம் நிலை வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், பல்கேரியாவின் டிஸ்விடனா பிரொன்கொவாவை எதிர்கொண்டார்.
போட்டியின் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் டிஸ்விடனா கைப்பற்றினார். இதையடுத்து ஆக்ரோஷமாக ஆடிய செரீனா போட்டியின் இரண்டாவது மற்றும் இறுதி செட்களை 6-3, 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதன் மூலம் 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் டிஸ்விடனாவை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒன்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றுக்குள் செரீனா வில்லியம்ஸ் நுழைந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X