search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்மித், டேவிட் வார்னர்
    X
    ஸ்மித், டேவிட் வார்னர்

    ஐ.பி.எல். முதல்வார போட்டிகளை தவறவிடும் வீரர்கள்: எந்த அணிக்கு அதிக பாதிப்பு?

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையில் சர்வதேச ஒயிட்-பால் கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதால், ஐபிஎல் முதல் வாரத்தில் முக்கிய வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதால் அந்த நேரத்தில் ஐபிஎல் போட்டி நடத்தப்படுவதால் அனைத்து வீரர்களும் முதலில் இருந்து கடைசி வரை இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையில் தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 4-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதனால் இரண்டு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் முதல்வார ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்து. இதனால் ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணிக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    அந்த அணியில் ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், ஜாஃ.ப்ரா ஆர்சர், பென் ஸ்டோக்ஸ், அண்ட்ரூ டை, டாம் கர்ரன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் ஐபிஎல் போட்டியின் 2-வது வாரத்தில்தான் கலந்து கொள்ள முடியும்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியி் ஜோஷ் ஹசில்வுட், சாம் கர்ரன் (தேர்வு செய்யப்பட்டால்) ஆகியோர் உள்ளனர்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட் கம்மின்ஸ், மோர்கன், டாம் பாண்டன் (தேர்வு செய்யப்பட்டால்) ஆகியோர் உள்ளனர்.

    மும்பை அணியில் மட்டும் யாரும் இடம் பெறவில்லை.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் டுவிட் வார்னர், பேர்ஸ்டோவ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர அணியில் மொயீன் அலி, ஆரோன் பிஞ்ச், ஜோசுவா பிலிப், கேன் ரிச்சர்ட்சன் இடம் பிடித்துள்ளனர்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்அணியில் ஜேசன் ராய், அலேக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டாய்னிஸ், இடம் பிடித்துள்ளனர்.

    கிங்ஸ் லெவன பஞ்சாப் அணியில் கிளென் மேக்ஸ்வெல் இடம் பிடித்துள்ளார்.
    Next Story
    ×