search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரோன் பிஞ்ச், மோர்கன்
    X
    ஆரோன் பிஞ்ச், மோர்கன்

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே ஒயிட்-பால் கிரிக்கெட் தொடர்: செப்டம்பர் 4-ல் தொடக்கம்

    ஆஸ்திரேலியா இங்கிலாந்து சென்று தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது.
    ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து சென்று ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்தும் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன.

    இங்கிலாந்தில் கொரோனாவிற்குப் பிறகு முதன்முறையாக கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளன. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 3  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி விட்டது.

    தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    அதன்பின் ஆஸ்திரேலியாவுடன் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து விளையாடுகிறது. இதை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு உறுதி செய்துள்ளது.

    அதன்படி டி20 கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 4, 6, மற்றும் 8-ந்தேதிகளில் சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர்11, 13 மற்றும் 16-ந்தேதிகளில் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடக்கிறது.

    ஆஸ்திரேலியா அணி ஆகஸ்ட் 24-ந்தேதி இங்கிலாந்து செல்கிறது.
    Next Story
    ×