என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லங்கா பிரிமீயர் லீக் டி20 அறிமுக தொடர் ஒத்திவைப்பு
Byமாலை மலர்11 Aug 2020 2:04 PM GMT (Updated: 11 Aug 2020 2:04 PM GMT)
ஆகஸ்ட் மாதம் 28-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த லங்கா பிரிமீயர் லீக் அறிமுக சீசன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் போர்டு டி20 லீக்கை நடத்த திட்டமிட்டது. வருகிற 28-ந்தேதி அறிமுக டி20 லீக் லங்கா பிரிமீயர் லீக்கில நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஐந்து அணிகள் 23 ஆட்டங்களில் விளையாடும் என தெரிவிக்கப்பட்டது.
கொழும்பு, கண்டி, காலே, தம்புல்லா, ஜாஃப்னா நகரங்களை கொண்டு அணிகள் அறிவிக்கப்பட்டன. அட்டவணைகளை தயார் செய்து கொண்டிருந்த வேலையில், வெளிநாட்டு வீரர்களுக்கும் அழைப்பு விடுத்தது.
இந்நிலையில்தான் இலங்கை கிரிக்கெட் வாரியம் சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து இலங்கை சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது, அப்போது வெளிநாட்டு இருந்து வரும் வீரர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 28-ந்தேதி போட்டி ஆரம்பிக்கும் நிலையல் வீரர்கள் ஏலம், அணி அறிமுக விழா இதைத்தாண்டி வெளிநாட்டு வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவது சாத்தியமில்லை. இதனால் நவம்பர் மாதத்திற்கு தொடரை ஒத்தி வைத்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X