search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெர்சிடஸ் வீரர் போட்டோஸ்
    X
    மெர்சிடஸ் வீரர் போட்டோஸ்

    பாதுகாப்பு வளையத்தை மீறிய பார்முலா 1 கார்பந்தய வீரர்கள்

    கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு வளையத்தை மீறியதாக பார்முலா 1 கார்பந்தய வீரர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றால் சுமார் 4 மாதங்களுக்குப்பின் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றனர். ரசிகர்கள் இன்று போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. வீரர்களை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடும் வீரர்கள் உயிர்-பாதுகாப்பு (Bio-Secure) சூழ்நிலையில் விளையாடுகிறார்கள்.

    பார்முலா 1 கார்பந்தயம் கடந்த வாரம் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரியா கிராண் பிரி-யில் மெர்சிடஸ் அணியின் வால்டெரி போட்டாஸ் முதல் இடம் பிடித்தார். பெர்ராரி அணியைச் சேர்ந்த லெக்லெர்க் 2-வது இடம் பிடித்தார்.

    பார்முலா 1 கார்பந்தய வீரர்களுக்கான பாதுகாப்பு பப்புள் (Bubble) என்று அழைக்கப்படுகிறது. போட்டோஸ் பப்புள் வளையத்திற்குள் அவரது பெண் தோழி மற்றும் டிரைனர் ஆகியோர் உள்ளனர்.

    இந்நிலையில் இருவரும் பாதுகாப்பு வளைத்தை விட்டு வெளியேறி விதிமுறையை மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விசாரணையை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

    போட்டோஸ் அனுமதி பெற்றுதான் வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இருந்தாலும் ‘‘அவர் தொடர்ந்து பாதுகாப்பு வளைத்திற்குள்தான் இருந்த வருகிறார். கொரோனா பரிசோதனை நடைமுறையை தொடர்ந்து வருகிறார். மொனாக்கோ போட்டிக்கு முன் பரிசோதனை செய்யப்படும்’’ என்று மெர்சிடெஸ் அணி தெரிவித்துள்ளது.

    பெர்ராரி அணியின் லெக்லெர்க் ரெஸ்டாரன்டில் தனிமனித இடைவெளி இன்றி அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரிடமும் விசாரணை நடத்த இருக்கிறார்கள்.
    Next Story
    ×