என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனைத்து சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தது சீனா
Byமாலை மலர்10 July 2020 10:21 AM GMT (Updated: 10 July 2020 10:21 AM GMT)
சீனாவில் இந்த வருடம் நடைபெற இருந்த அனைத்து சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலாக சீனாவில் கண்டறியப்பட்டது. ஊரடங்கு, அதிகப்படியான சோதனை ஆகியவற்றின் மூலம் நோயை கட்டுப்படுத்தியது. என்றாலும் தற்போது பீஜிங் போன்ற முக்கியமான நகரில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதனால் இந்த வருடம் நடைபெற இருக்கும் அனைத்து சர்வதேச விளையாட்டு போட்டிகள் அனைத்தையும் ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது.
2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான சோதனை மட்டும் நடைபெறும் என்று அறிவித்துள்ள சீனா, பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் ஆறு தொடர்கள் (பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் இறுதி தொடர் உள்பட) ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆண்களுக்கான நான்கு தொடர்களையும் நடத்த திட்டமிட்ருந்தது.
அக்டோபர் மாதம் ஆசிய விளையாட்டு கிளிம்பிங் சாம்பியன்ஷிப், டிசம்பர் மாதம் பேட்மிண்டன் உலக டூர் பைனலும் நடைபெற இருந்தது. அதேபோல் அக்டோபர் மாதம் இரண்டு சைக்கிள் ரேஸ் தொடரும் நடைபெற இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X