search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை கால்பந்து
    X
    ஆசிய கோப்பை கால்பந்து

    ஆசிய கோப்பை கால்பந்து - இந்தியா உள்பட 5 நாடுகள் ஆர்வம்

    ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற இந்தியா, சவுதிஅரேபியா, கத்தார், ஈரான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 நாடுகள் போட்டியிடுகின்றன.
    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 2027-ம் ஆண்டுக்குரிய 19-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமத்தை பெற இந்தியா, சவுதிஅரேபியா, கத்தார், ஈரான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 நாடுகள் போட்டியிடுகின்றன. இந்தியா இதுவரை இந்த போட்டியை நடத்தியதும் இல்லை. கோப்பையை வென்றதும் இல்லை.

    5 நாடுகள் ஆர்வம் காட்டுவதை வரவேற்றுள்ள ஆசிய கால்பந்து கூட்டமைப்பு, 19-வது ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு யாருக்கு வழங்கப்படும் என்பது அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×