search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர்கள்
    X
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர்கள்

    இங்கிலாந்தில் தனிமைப்படுத்தும் நாட்களை நிறைவு செய்தது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி

    இங்கிலாந்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நாட்களை நிறைவு செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, பயிற்சி ஆட்டத்திற்கு தயாராகிறது.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்றால் வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்து செல்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த 9-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்றடைந்தது. அங்குள்ள புகழ்பெற்ற மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானம், அதன் அருகில் உள்ள ஓட்டலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

    14 நாட்கள் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் இன்றில் இருந்து பயிற்சியை தொடங்க இருக்கிறார்கள். அவர்கள் மூன்று நாட்கள் கொண்ட வார்ம்-அப் மேட்சியில் விளையாட இருக்கிறார்கள்.

    இந்தத் தொடருக்கான பயிற்சியை மேற்கொள்ள 30 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 30 வீரர்கள் மற்றும் அணியுடன் செல்லும் ஸ்டாஃப்கள் என அனைவருக்கும் சவுத்தாம்ப்டனில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும்.

    பரிசோதனை முடிவு வந்த பின், வியாழக்கிழமையில் இருந்து பயிற்சியை மேற்கொள்வார்கள். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அதிகாரப்பூர்வ அணி அறிவிக்கப்பட்ட பின், இங்கிலாந்து அணி ஜூலை 1-ந்தேதி 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந்தேதி தொடங்குகிறது.
    Next Story
    ×