என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பசியுடன் திரியும் கால்நடைகளுக்கு உணவளியுங்கள்: ஷிகர் தவான் வேண்டுகோள்
Byமாலை மலர்12 Jun 2020 5:51 PM GMT (Updated: 12 Jun 2020 5:51 PM GMT)
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் குடும்பத்துடன் சாலையில் திரிந்த மாடுகளுக்கு உணவளித்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்களில் பெரும்பாலானோர் சமூக வலைத்தளங்களில் தங்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் அண்மைக்காலமாக பல்வேறு பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தனது குடும்பத்துடன் சாலையில் திரியும் மாடுகளுக்கு ஷிகர் தவான் குடும்பத்துடன் உணவளித்த வீடியோவை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தவானும், அவரது மகனும் மாடுகளுக்குக் காய்கறிகளை வழங்குகின்றனர்.
வீடியோவுடன் கருத்தையும் பதிவிட்டுள்ள தவான், ‘‘ஒரு தந்தையாக எனது மகனுக்கு வாழ்க்கையில் உண்மையான மதிப்பு எது என்றும், அடுத்தவர்கள் மீது அன்பு செலுத்துவதையும் கற்றுக்கொடுப்பதை முக்கியமாக நினைக்கிறேன்.
குறிப்பாக யாருக்குத்தேவை இருக்கிறதோ அவர்களுக்கு உதவ வேண்டும். பசியுடன் இருக்கும் கால்நடைகளுக்கு இந்தக் கடினமான நேரத்தில் உணவளியுங்கள். இந்த முக்கிய பாடத்தை எனது மகனுக்குக் கற்றுக்கொடுப்பதில் பெருமை அடைகிறேன். அனைவரும் அவர்களால் முடிந்தவரை உதவ வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் தனது குடும்பத்துடன் சாலையில் திரியும் மாடுகளுக்கு ஷிகர் தவான் குடும்பத்துடன் உணவளித்த வீடியோவை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தவானும், அவரது மகனும் மாடுகளுக்குக் காய்கறிகளை வழங்குகின்றனர்.
வீடியோவுடன் கருத்தையும் பதிவிட்டுள்ள தவான், ‘‘ஒரு தந்தையாக எனது மகனுக்கு வாழ்க்கையில் உண்மையான மதிப்பு எது என்றும், அடுத்தவர்கள் மீது அன்பு செலுத்துவதையும் கற்றுக்கொடுப்பதை முக்கியமாக நினைக்கிறேன்.
குறிப்பாக யாருக்குத்தேவை இருக்கிறதோ அவர்களுக்கு உதவ வேண்டும். பசியுடன் இருக்கும் கால்நடைகளுக்கு இந்தக் கடினமான நேரத்தில் உணவளியுங்கள். இந்த முக்கிய பாடத்தை எனது மகனுக்குக் கற்றுக்கொடுப்பதில் பெருமை அடைகிறேன். அனைவரும் அவர்களால் முடிந்தவரை உதவ வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
View this post on InstagramA post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X