என் மலர்
செய்திகள்

பார்முலா 1
பார்முலா 1 கார் பந்தயத்தின் அஜர்பைஜான், சிங்கப்பூர், ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் ரத்து
கொரோனா வைரஸ் தொற்றால் பார்முலா 1 கார் பந்தயத்தின் அஜர்பைஜான், சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பார்முலா 1 கார்பந்தயம் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறும் போட்டிக்கு அந்தந்த நாட்டின் பெயருடன் கிராண்ட் பிரிக்ஸ் என்று அழைக்கப்படும்.
எல்லா சுற்றுகளிலும் அதிக புள்ளிகள் பெறும் வீரருக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும். இந்நிலையில் அஜர்பைஜான், சிங்கப்பூர், ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பார்முலா 1-க்கு ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், 8 சுற்றுகள் ரசிகர்கள் இன்றி நடத்தப்படும். நிலைமை சரியானால் அதற்கு தகுந்த வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ் முதலில் ஜூன் 7-ந்தேதி நடைபெற இருந்தது. சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் செப்டம்பர் 20-ந்தேதி நடைபெற இருந்தது.
ஆஸ்திரியா கிராண்ட் பிரிக்ஸ் ஜூலை மாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






