என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெருக்கடியான நேரத்தில் இங்கிலாந்துக்கு உதவி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நன்றி தெரிவித்த முன்னாள் கேப்டன்
Byமாலை மலர்8 Jun 2020 9:59 AM GMT (Updated: 8 Jun 2020 9:59 AM GMT)
வெஸ்ட் இண்டீஸ் அணி இக்கட்டான நிலையில் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்ய சம்மதம் தெரிவித்ததற்காக முன்னாள் கேப்டன் நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 3 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக நாளை ( 9-ந்தேதி ) இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.
இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந்தேதி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் தொடங்குகிறது. ஜூலை 28-ம் தேதியுடன் இந்த டெஸ்ட் தொடர் முடிகிறது.
இந்த இக்கட்டான நேரத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டேவிட் கோவர் பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
கொரோனா வைரசால் தற்போது உலகம் முழுவதும் ஒரே மாதிரியான நெருக்கடி நிலை உள்ளது. இந்த நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து வந்து டெஸ்டில் ஆடுவது சிறப்பானது. இது அவர்களது விளையாட்டு உத்வேகத்தை காட்டுகிறது. இதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் விளையாடுவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்து இருக்கிறது. கொரோனா நோய் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டதால் பல்வேறு நாடுகளுக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு மற்ற நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கலாம்.
இவ்வாறு டேவிட் கோவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந்தேதி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் தொடங்குகிறது. ஜூலை 28-ம் தேதியுடன் இந்த டெஸ்ட் தொடர் முடிகிறது.
இந்த இக்கட்டான நேரத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டேவிட் கோவர் பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
கொரோனா வைரசால் தற்போது உலகம் முழுவதும் ஒரே மாதிரியான நெருக்கடி நிலை உள்ளது. இந்த நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து வந்து டெஸ்டில் ஆடுவது சிறப்பானது. இது அவர்களது விளையாட்டு உத்வேகத்தை காட்டுகிறது. இதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் விளையாடுவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்து இருக்கிறது. கொரோனா நோய் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டதால் பல்வேறு நாடுகளுக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு மற்ற நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கலாம்.
இவ்வாறு டேவிட் கோவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X