என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போதை பொருள் கடத்தியதாக இலங்கை வீரர் கைது: சஸ்பெண்ட் செய்கிறது கிரிக்கெட் போர்டு
Byமாலை மலர்26 May 2020 9:13 AM GMT (Updated: 26 May 2020 9:13 AM GMT)
இலங்கை கிரிக்கெட் அணியின் ஷெஹன் மதுஷங்கா ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஷெஹன் மதுஷங்கா. 25 வயதாகும் இவர் 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். வங்காளதேசத்திற்கு எதிரான இந்த முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார்.
நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு கிராம் ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்ததாக ஷெஹன் மதுஷங்காவை போலீசார் தடுத்து நிறுத்தினர். தீவிர விசாரணைக்குப்பின் நேற்று வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். ஷெஹன் மதுஷங்காவை இரண்டு வாரங்கள் ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஷெஹன் மதுஷங்கா வங்காளதேசத்திற்கு எதிராக 2018-ல் இரண்டு டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பின்னர் காயத்தால் விளையாடாமல் உள்ளார். ஷெஹன் மதுஷங்கா மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தத்தில் இருந்து அவரை நீக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X