என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெஸ்ட் இண்டீஸ் அணி 8-ந்தேதி இங்கிலாந்து பயணம்: 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது
Byமாலை மலர்26 May 2020 8:48 AM GMT (Updated: 26 May 2020 8:48 AM GMT)
இங்கிலாந்து சென்று மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் 8-ந்தேதி புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் ஜூன் 4 முதல் 29-ந்தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டத்திற்கு தடை விதித்துள்ளதால், இங்கிலாந்தில் நடைபெற இருந்த இந்த டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த சீசனில் போட்டிகள் எதுவும் இங்கிலாந்தில் நடைபெறாமல் போனால் ரூ. 3,553 கோடி நஷ்டம் ஏற்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை அதிகாரி டாம் ஹாரிசன் கூறியிருந்தார்.
இதற்கிடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகிற 1-ந்தேதி முதல் விளையாட்டு போட்டிகளுக்கு படிப்படியாக அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார்.
ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில், போட்டியை நடத்தலாம், கொரோனா வைரஸ் பாதிப்பைப் பொறுத்து இதற்கான அனுமதி தொடர்ந்து நீட்டிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, சில அறிவிப்புகள் இங்கிலாந்து கிரிக்கெட் திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பயிற்சியை இங்கிலாந்து வேகப்பந்து வீரர்கள் தொடங்கினர். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வருகிற 8-ந்தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அந்த அணி 3 டெஸ்டில் விளையாடுகிறது. இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜானி கிரேயு கூறியதாவது:-
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் கடைசி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். அவர்களும் தங்களுடைய திட்டங்களின் இறுதி வடிவத்தில் உள்ளார்கள். இதனால் இங்கிலாந்து அரசின் ஒத்துழைப்பை அவர்களால் பெற முடியும்.
இந்த மாத இறுதியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எங்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கும். இதன் மூலம் எங்களுடைய கிரிக்கெட் வாரியம் அனுமதி பெற்று ஜூன் தொடக்கத்தில் வீரர்கள் இங்கிலாந்து செல்வார்கள்.
முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு 4 வார காலம் எங்களுக்குத் தேவைப்படும். எனவே, அடுத்த மாதம் ஜூன் 8-ந்தேதி எங்களுடைய வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஜூலை 8, ஜூலை 16, ஜூலை 24 ஆகிய தேதிகளில் டெஸ்ட் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X