search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ்
    X
    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ்

    டோக்கியோ ஒலிம்பிக் ஒத்திவைப்பால் 6,000 கோடி ரூபாய் கூடுதல் செலவை எதிர்நோக்கும் ஐஓசி

    டோக்கியோ ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவை எதிர்நோக்கி இருக்கிறோம் என ஐஓசி தெரிவித்துள்ளது.
    ஜப்பான் டோக்கியோ நகரில் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கின்றது.

    பொதுவாக போட்டிக்கான செலவை போட்டியை நடத்தும் நாடு, அந்த நகர நிர்வாகம் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமி்ட்டி ஏற்றுக்கொள்ளும். ஜப்பான் இந்த ஒலிம்பிக் போட்டிக்காக சுமார் 12.6 பில்லியன் டாலர் (இந்திய பண மதிப்பில் 95,562 கோடி ரூபாய்) செலவழித்துள்ளது.

    தற்போது ஒரு வருடத்திற்கு போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக 800 மில்லியன் டாலர் (சுமார் 6,067.40 கோடி ரூபாய்) செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணத்தை போட்டி அமைப்பாளர்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேச் தெரிவித்துள்ளார்.

    800 மில்லியன் டாலரில் 650 மில்லியன் டாலரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஏற்றுக் கொள்ளும் என்றும், 150 மில்லியன் டாலரை சர்வதேச பெடரேசன்கள், தேசிய ஒலிம்பிக் கமிட்டிகள் ஆகியவற்றிடம் இருந்து வாங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தாமஸ் பேச் கூறுகையில் ‘‘போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படும் வகையில் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கை, அடுத்த வருடம் சிறப்பாக நடத்தி முடிக்க நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

    ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்பட்டதில் இருந்து ஒரு வருடம் இரண்டு மாதங்கள் இருக்கின்றன. எதிர்காலம் திட்டம் குறித்து எந்தவொரு ஊகங்களையும் நாம் தெரிவிக்க இயலாது’’என்றார்.

    கடந்த மாதம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்டால் போட்டியை நடத்தும் நாட்டிற்கு ஏராளமான செலவு ஏற்படும். இருந்தாலும் நாங்கள் அதில் பெருமளவு பங்கெடுத்துக் கொள்வோம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×