என் மலர்
செய்திகள்

அமித் மிஸ்ரா
எனது ஆட்டத்திறன் உச்சத்தில் இருக்கும்போது அணியில் இருந்து நீக்கப்பட்டேன்: அமித் மிஸ்ரா
இந்தியாவின் முன்னணி ரிஸ்ட் ஸ்பின்னர்களில் ஒருவரான அமித் மிஸ்ரா, அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் அமித் மிஸ்ரா. 37 வயதாகும் இவர் 2003-ல் முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆனார். இறுதியாக 2017-ம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணிக்காக இங்கிலாந்தை எதிர்த்து விளையாடினார்.
சுமார் 14 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடினாலும் 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
மிஸ்ரா அறிமுகமான காலத்தில் அனில் கும்ப்ளே என்ற ஜாம்பவான் இருந்தார். அதன்பின் ஆஃப் ஸ்பின்னர்களான ஹர்பஜன் சிங், அஸ்வின் ஆதிக்கம் செலுத்தினர். இதனால் ரிஸ்ட் ஸ்பின்னர்களான இவரால் நிரந்தரமாக அணியில் இடம் பிடிக்க முடியவில்லை.
தற்போது ரிஸ்ட் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் மிஸ்ராவுக்கு வயதாகிவிட்டது. இந்நிலையில் எனது ஆட்டத்திறன் உச்சத்தில் இருக்கும்போது அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து மிஸ்ரா கூறுகையில் ‘‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது? என்பதை எனக்குள்ளேயே கேட்டுக்கொள்வேன். என்னுடைய சாதனை புள்ளி விவரங்களுக்கு ஒருவருமே பதில் அளிக்கவில்லை. யாராவது ஒருவர் காயத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டால், காயத்தில் இருந்து மீண்ட பின் அவர் அணிக்கு திரும்ப வேண்டும் என்பது நிர்வாகத்தின் விதிமுறை. விருத்திமான் சகா சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் அணிக்கு திரும்பினார். எனக்கு ஏன் அப்படி நிகழவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.
நான் சிறந்த பார்மில் இருக்கும்போது கூட, மற்றோர்களுக்காக யாராவது நீக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தால், நீக்கப்பட்ட ஆளாக நான் இருந்தேன்’’ என்றார்.
Next Story






