search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரொனால்டினோ
    X
    ரொனால்டினோ

    ஜெயிலில் இருந்து ரிலீஸ்: வீட்டுக்காவலில் ரொனால்டினோ

    பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் பராகுவே நாட்டில் ஜெயின் தண்டனை அனுபவித்து வந்தார்.
    பிரேசில் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்தவர் ரொனால்டினோ. 2002-ம் ஆண்டு பிரேசில் அணி உலக கோப்பையை கைப்பற்றியபோது இவர் அணியில் இருந்தவர். மேலும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், பார்சிலோனா, ஏசி மிலன் போன்ற உலக புகழ்பெற்ற கிளப் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

    40 வயதாகும் ரொனால்டினோ 2015-ல் கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த மாதம் 6-ந்தேதி பராகுவே நாட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தனது சகோதரர் ரொபேர்ட்டோ ஆஸ்சிஸ் உடன் தங்கியிருந்தார். அப்போது போலீசார் அவர்களிடம் சோதனை நடத்தியபோது இருவரும் பராகுவே நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரியவந்தது.

    போலீசார் நடத்திய விசாரணையில் அது போலி பாஸ்போர்ட் எனத் தெரியவந்தது. இதனால் சகோதரருடன் ரொனால்டோ ஜெயிலில் அடைக்கப்பட்டார். முதலில் கோர்ட் இவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

    அதன்பின் இருவரும் தலா 8 லட்சம் டாலர் பிணைத்தொகை கட்டி ஜாமின் பெற்றுள்ளனர். அத்துடன் இருவரும் விசாரணை முடியும் வரை வீட்டிக்காவலில் இருக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் நட்சத்திர ஓட்டலில் காவலில் இருக்கின்றனர்.
    Next Story
    ×