search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: புதிய தேதி அறிவிப்பு

    கடந்த மாதம் நடக்கவிருந்த உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    லாசானே:

    உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் 22-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தென்கொரியாவின் புசான் நகரில் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக இந்த போட்டி ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.
    கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் ஜூன் மாதமும் நடத்தப்படவில்லை.

    இந்த நிலையில் டேபிள் டென்னிஸ் சம்மேளன நிர்வாக கமிட்டியின் ஆலோசனைக்கு பிறகு இந்த போட்டியை செப்டம்பர் 27-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை நடத்துவது என்று நேற்று முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×