என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் போட்டிக்காக தியாகம் பண்ணக்கூடியது அல்ல மனித உயிர்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் உரிமையாளர்
Byமாலை மலர்15 March 2020 3:30 PM GMT (Updated: 15 March 2020 3:30 PM GMT)
கொரோனா வைரஸ் தொற்று பீதியால் ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், ரத்து செய்யப்பட்டாலும் பரவாயில்லை என நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2020 சீசன் வருகிற 29-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதால் ஏப்ரல் 15-ந்தேதி வரை தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதன்பின்பும் நிலைமை கட்டுக்குள் வராவிடில் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா இதுகுறித்து கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டிக்காக தியாகம் பண்ணக்கூடியது அல்ல மனித உயிர். இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் நிலைமை கட்டுக்குள் வராவிடில் போட்டியை நடத்தக்கூடாது.
ஒரு மனித உயிரைக்கூட சமரசம் செய்து கொள்ள முடியாது. ஐபிஎல் ரத்து செய்யப்பட்டு இறுதியில் ஒரு உயிரை காப்பாற்ற முடியும் என்றால் அது மதிப்பிற்குரியதாகும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. வருந்துவதை விட பாதுகாப்பு சிறந்தது’’ என்றார்.
அதன்பின்பும் நிலைமை கட்டுக்குள் வராவிடில் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா இதுகுறித்து கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டிக்காக தியாகம் பண்ணக்கூடியது அல்ல மனித உயிர். இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் நிலைமை கட்டுக்குள் வராவிடில் போட்டியை நடத்தக்கூடாது.
ஒரு மனித உயிரைக்கூட சமரசம் செய்து கொள்ள முடியாது. ஐபிஎல் ரத்து செய்யப்பட்டு இறுதியில் ஒரு உயிரை காப்பாற்ற முடியும் என்றால் அது மதிப்பிற்குரியதாகும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. வருந்துவதை விட பாதுகாப்பு சிறந்தது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X