என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘ப்ரீ பாஸ்’ பெறுவதைவிட தோற்பது மேல்: இந்தியாவை சீண்டிய தென்ஆப்பிரிக்கா கேப்டன்
Byமாலை மலர்6 March 2020 12:05 PM GMT (Updated: 6 March 2020 12:05 PM GMT)
உலக கோப்பை தொடரில் ‘ப்ரீ பாஸ்’ மூலம் இறுதி போட்டிக்கு முன்னேறுவதை விட விளையாடி தோற்பது மேல் என தென்ஆப்பரிக்கா அணி கேப்டன் இந்தியாவை மறைமுகமாக தாக்கியுள்ளார்.
பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் இடம் பிடித்த இந்தியா, 2-வது இடம் பிடித்த ஆஸ்திரேலியா, ‘பி’ பிரிவில் இடம் பிடித்த தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
நேற்று சிட்னியில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத இருந்தன. கனமழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் லீக் ஆட்டத்தில் முதல் இடம் பிடித்த இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆகவே முதன்முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறின.
அதே மைதானத்தில் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் விளையாட இருந்தனர். இந்த போட்டியும் மழையால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி மழை பெய்து போட்டி ரத்து செய்யப்பட்டால் தென்ஆப்பிரிக்கா இறுதி போட்டிக்கு முன்னேறும் நிலை இருந்தது.
ஆனால், மைதான ஊழியர்களின் தீவிர முயற்சியால் ஆடுகளம் போட்டிக்கு தயாரானது. ஆஸ்திரேலியா முதலில் 20 ஓவர்களும் பேட்டிங் செய்தது. அதன்பின் மழை பெய்ததால் 13 ஓவரில் 98 ரன்கள் தென்ஆப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பரபரப்பான ஆட்டத்தில் தென்அப்பிரிக்கா அணி ஐந்து ரன்னில் வெற்றியை நழுவ விட்டது. போட்டி முடிந்த பின்னர் மழை பெய்திருந்தால் இந்தியாவை போன்று விளையாடாமல் இறுதி போட்டிக்கு முன்னேறியிருக்க வாய்ப்பு இருந்தது குறித்து தென்ஆப்பிரிக்கா கேப்டன் வான் நீகெர்க்கிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ‘ப்ரீ பாஸ்’ மூலம் செல்வதை விட தோற்பது மேல் என இந்தியாவை மறைமுகமாக சாடினார். இதுகுறித்து வான் நீகெர்க் கூறுகையில் ‘‘நான் மைதான ஊழியர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். அவர்கள் நாங்கள் விளையாடுவதற்காக கடுமையான வகையில் பணியாற்றினார்கள்.
நாங்கள் இங்கே கிரிக்கெட் விளையாட வந்தோம். உலக கோப்பை இறுதி போட்டிக்கு ‘ப்ரீ பாஸ்’ பெறுவதை விட தோல்வியை ஏற்பேன். எதிர்காலத்தில் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களுக்கு ரிசர்வ் டே தேவை’’ என்றார்.
நேற்று சிட்னியில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத இருந்தன. கனமழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் லீக் ஆட்டத்தில் முதல் இடம் பிடித்த இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆகவே முதன்முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறின.
அதே மைதானத்தில் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் விளையாட இருந்தனர். இந்த போட்டியும் மழையால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி மழை பெய்து போட்டி ரத்து செய்யப்பட்டால் தென்ஆப்பிரிக்கா இறுதி போட்டிக்கு முன்னேறும் நிலை இருந்தது.
ஆனால், மைதான ஊழியர்களின் தீவிர முயற்சியால் ஆடுகளம் போட்டிக்கு தயாரானது. ஆஸ்திரேலியா முதலில் 20 ஓவர்களும் பேட்டிங் செய்தது. அதன்பின் மழை பெய்ததால் 13 ஓவரில் 98 ரன்கள் தென்ஆப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பரபரப்பான ஆட்டத்தில் தென்அப்பிரிக்கா அணி ஐந்து ரன்னில் வெற்றியை நழுவ விட்டது. போட்டி முடிந்த பின்னர் மழை பெய்திருந்தால் இந்தியாவை போன்று விளையாடாமல் இறுதி போட்டிக்கு முன்னேறியிருக்க வாய்ப்பு இருந்தது குறித்து தென்ஆப்பிரிக்கா கேப்டன் வான் நீகெர்க்கிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ‘ப்ரீ பாஸ்’ மூலம் செல்வதை விட தோற்பது மேல் என இந்தியாவை மறைமுகமாக சாடினார். இதுகுறித்து வான் நீகெர்க் கூறுகையில் ‘‘நான் மைதான ஊழியர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். அவர்கள் நாங்கள் விளையாடுவதற்காக கடுமையான வகையில் பணியாற்றினார்கள்.
நாங்கள் இங்கே கிரிக்கெட் விளையாட வந்தோம். உலக கோப்பை இறுதி போட்டிக்கு ‘ப்ரீ பாஸ்’ பெறுவதை விட தோல்வியை ஏற்பேன். எதிர்காலத்தில் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களுக்கு ரிசர்வ் டே தேவை’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X