என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்கள் டி20 உலக கோப்பை: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா
Byமாலை மலர்5 March 2020 11:52 AM GMT (Updated: 5 March 2020 11:52 AM GMT)
சிட்னியில் மழை அச்சுறுத்திய நிலையிலும் தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா.
பெண்கள் டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் அரையிறுதி போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஆட்டம் நடைபெற்றது.
மழை எந்த நேரத்திலும் போட்டியை பாதிக்கும் என்பதால் தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா வீராங்கனைகள் முதலில் பேட்டிங் செய்தனர்.
தொடக்க வீராங்கனைகளான அலிசா ஹீலி 18 ரன்களும், பெத் மூனே 28 ரன்களும் சேர்த்தனர். கேப்டன் மெக் லானிங் ஆட்டமிழக்காமல் 49 பந்தில் 49 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது.
தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்ய தயாரானபோது மழை பெய்தது. சிறிது நேரம் கழித்து மழை நின்றன. இதனால் டக்-வொர்த் லீவிஸ் விதிப்படி தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 13 ஓவரில் 98 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
13 ஓவரில் 98 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகள் களம் இறங்கினர். தொடக்க வீராங்கனைகளான லீ, டேன் வான் நீகெர்க் ஆகியோரால் அதிரடியாக விளையாட முடியாமல் திணறினர். லீ 10 பந்தில் 12 ரன்களும், வான் நீகெர்க் 12 பந்தில் 12 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த ப்ரீஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 4.5 ஓவரில் 24 ரன்கள் எடுப்பதற்குள் தென்ஆப்பிரிக்கா மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு லூயஸ் உடன் வால்வார்த் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் தென்ஆப்பிரிக்கா வெற்றியை நோக்கி சென்றது. 10 ஓவரில் முடிவில் தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்க்ள எடுத்திருந்தது.
கடைசி 18 பந்தில் 32 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் 11-வது ஓவரில் ஆஸ்திரேலிய வீராங்கனை டெலிசா கிம்மின்ஸ் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. கடைசி இரண்டு ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட்டது. 12-வது ஓவரை ஸ்கட் வீசினார். இந்த ஓவரில் லூயஸ் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் வால்வார்த் சிக்ஸ் விளாசினார். என்றாலும் 8 ரன்களே கிடைத்தது.
இதனால் கடைசி 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் தென்ஆப்பிரிக்கா அணியால் 13 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா டக்-வொர்த் லீவிஸ் விதியின்படி ஐந்து ரன்னில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மழை எந்த நேரத்திலும் போட்டியை பாதிக்கும் என்பதால் தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா வீராங்கனைகள் முதலில் பேட்டிங் செய்தனர்.
தொடக்க வீராங்கனைகளான அலிசா ஹீலி 18 ரன்களும், பெத் மூனே 28 ரன்களும் சேர்த்தனர். கேப்டன் மெக் லானிங் ஆட்டமிழக்காமல் 49 பந்தில் 49 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது.
தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்ய தயாரானபோது மழை பெய்தது. சிறிது நேரம் கழித்து மழை நின்றன. இதனால் டக்-வொர்த் லீவிஸ் விதிப்படி தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 13 ஓவரில் 98 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
13 ஓவரில் 98 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகள் களம் இறங்கினர். தொடக்க வீராங்கனைகளான லீ, டேன் வான் நீகெர்க் ஆகியோரால் அதிரடியாக விளையாட முடியாமல் திணறினர். லீ 10 பந்தில் 12 ரன்களும், வான் நீகெர்க் 12 பந்தில் 12 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த ப்ரீஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 4.5 ஓவரில் 24 ரன்கள் எடுப்பதற்குள் தென்ஆப்பிரிக்கா மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு லூயஸ் உடன் வால்வார்த் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் தென்ஆப்பிரிக்கா வெற்றியை நோக்கி சென்றது. 10 ஓவரில் முடிவில் தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்க்ள எடுத்திருந்தது.
கடைசி 18 பந்தில் 32 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் 11-வது ஓவரில் ஆஸ்திரேலிய வீராங்கனை டெலிசா கிம்மின்ஸ் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. கடைசி இரண்டு ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட்டது. 12-வது ஓவரை ஸ்கட் வீசினார். இந்த ஓவரில் லூயஸ் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் வால்வார்த் சிக்ஸ் விளாசினார். என்றாலும் 8 ரன்களே கிடைத்தது.
இதனால் கடைசி 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் தென்ஆப்பிரிக்கா அணியால் 13 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா டக்-வொர்த் லீவிஸ் விதியின்படி ஐந்து ரன்னில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X