search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா-இங்கிலாந்து கேப்டன்கள் கைகுலுக்கும் காட்சி
    X
    இந்தியா-இங்கிலாந்து கேப்டன்கள் கைகுலுக்கும் காட்சி

    பெண்கள் டி20 உலக கோப்பை: இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது இந்தியா

    இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதால் புள்ளிகள் அடிப்படையில் இந்திய பெண்கள் அணி டி20 உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
    சிட்னி:

    பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்து புள்ளிகள் பட்டியலில் முன்னிலையில் உள்ள அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டிகள் நடைபெற்றுவருகிறது. 

    அதன் படி  ‘ஏ’ பிரிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த இந்திய அணிக்கு 'பி’ பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிக்கும் இடையே இன்று முதல் அரையிறுதி போட்டி நடைபெறுவதாக இருந்தது.

    சோகத்தில் இங்கிலாந்து வீராங்கணை

    ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற இருந்த அரையிறுதி போட்டி மழை குறுக்கீட்டால் டாஸ் கூட சுண்டப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    அரையிறுதி போட்டி கைவிடப்பட்டதையடுத்து புள்ளிகள் அடிப்படையில் பட்டியலில் 'ஏ’ பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதாக அறிவிக்கப்பட்டது.  
    Next Story
    ×